புலிகள் தாக்குதல்-யுஎஸ்,இத்தாலி தூதர்கள் காயம்
கொழும்பு:இலங்கையின் கிழக்குப் பகுதியான மட்டக்களப்பில் உள்ள விமானப் படை தளத்தின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் சிக்கிஅமெரிக்க, இத்தாலி நாட்டு தூதர்கள் காயமடைந்தனர்.
இன்று காலை இலங்கைக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்ட் ஓ பிளேக், இத்தாலிய தூதர் பியோ மரியானி ஆகியோர் 15 அதிகாரிகளுடன்மட்டக்களப்பில் உள்ள விமானப் படை தளத்தில் ஹெலிகாப்டரில் வந்திறங்கினர்.
அப்போது அந்த தளத்தின் மீது புலிகள் பீரங்கித் தாக்குதல் நடத்தினர். இதில் இரு தூதர்கள் உள்பட பலர் காயமடைந்தனர்.
அதே போல மட்டக்களப்பின் வெபார் மைதானத்தில் இலங்கை பேரழிவு நிர்வாகத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் வந்திறங்கிய 2விமானப் படை ஹெலிகாப்டர்கள் மீதும் பீரங்கி தாக்குதல் நடந்தது. இதில் அமைச்சர் மயிரிழையில் உயிர் தப்பினார்.
காயமடைந்த அமெரிக்கத் தூதர் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் கொழும்பு கொண்டு செல்லப்பட்டார். இத்தாலியத் தூதர் மட்டக்களப்புமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து இலங்கை மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் மகிந்தா சமரசிங்கே கூறுகையில்,
மட்டக்களப்பில் இடத்தில் ராணுவத்தினர் செயல்பாடு குறித்து பார்வையிடுவதற்காக அமெரிக்க, இத்தாலிய தூதர்கள் சென்றபோது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இத்தாலி தூதருக்கு தலையில் அடிபட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications