குவாத்ரோச்சி: சிபிஐ குழு அர்ஜென்டினா பயணம்
டெல்லி:அர்ஜென்டினாவில் கைது செய்யப்பட்டுள்ள குவாத்ரோச்சியை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்காக 2 பேர் கொண்ட சிபிஐ குழு அங்கு சென்றுள்ளது.
போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கில் முக்கியக் குற்றவாளியான குவாத்ரோச்சி அர்ஜென்டினாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைது விவகாரத்தை மத்திய அரசுபடு ரகசியமாக வைத்திருந்தது.
.ஆனால் அந்த விஷயம் வெளியே தெரிந்தவுடன் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. குவாத்ரோச்சியைக் காக்க காங்கிரஸ் கட்சி முயல்வதாக குற்றச்சாட்டுஎழுந்தது. உடனடியாக குவாத்ரோச்சியை இந்தியாவுக்குக் கொண்டு வந்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவை கோரி வருகின்றன.
இந்த நிலையில், குவாத்ரோச்சியை இந்தியாவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக அர்ஜென்டினா அதிகாரிகளுடன் ஆலோசிப்பதற்காக சிபிஐ விசாரைண இயக்குநர்மற்றும் கண்காணிப்பாளர் ஆகியோர் அடங்கிய குழு அர்ஜென்டினா கிளம்பிச் சென்றுள்ளது.
பியூனஸ்அயர்ஸ் நகரில் அர்ஜென்டினா அதிகாரிகளைச் சந்தித்து குவாத்ரோச்சியை ஒப்படைக்குமாறு கோரும் அதிகாரப்பூர்வ மனுவை சிபிஐ குழு நாளைசமர்ப்பிக்கிறது.
இந்த மனு மீதான நடவடிக்கைக்கு குறைந்தது 15 நாட்கள் தேவைப்படும் என அர்ஜென்டினா தெரிவித்துள்ளது. சிபிஐ சார்பில் வாதாட அர்ஜென்டினாவைச் சேர்ந்தகார்லோஸ் என்ற வழக்கறிஞரை அந்த நாட்டு அரசு நியமித்துள்ளது.
குவாத்ரோச்சியை நாடு கடத்துவதில் சில சட்ட சிக்கல்களும் உள்ளன. அர்ஜென்டினா நாட்டுச் சட்டப்படி 20 ஆண்டுகளுக்கு முந்தைய எந்த வழக்கிலும் நடவடிக்கைஎடுக்க முடியாது என்று கூறப்படுகிறது. எனவே போபர்ஸ் வழக்கில் குவாத்ரோச்சியை விசாரிக்க இந்தியாவுக்கு, அர்ஜென்டினா அனுமதி தருமா என்பதில்கேள்விக்குறி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications