பிரதமர், கருணாநிதி வரவேற்பு-பாஜக அதிருப்தி
சென்னை:மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள பட்ஜெட், கல்விக்கும், சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம்தரும் வகையில் அமைந்துள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
பட்ஜெட் குறித்து கருத்து கேட்டபோது பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். முதல்வர் கருணாநிதியும்பட்ஜெட்டைப் பாராட்டியுள்ளார். மக்கள் நல்வாழ்வை மனதில் வைத்து தீட்டப்பட்ட பட்ஜெட்டை நிதியமைச்சர்ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ளதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்:
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 2007-08ம் ஆண்டுக்கான பட்ஜெட் விவசாயிகள், நடுத்தரத் தட்டு மக்களைமுன்வைத்துத் தீட்டப்பட்டுள்ளது.
50 லட்சம் விவசாயிகளுக்கு புதிய பயிர்க் கடன் வழங்குவதற்காக 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாயைவங்கிகள் மூலம் வழங்கப் போவதாக அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது.
இதேபோல ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தை மேலும் 300 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்த 12ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியிருப்பதும் பாராட்டுக்குரியது.
கல்விக்காக 34 சதவீத அதிக ஒதுக்கீடு செய்துள்ளதும், பள்ளிக் கல்விக்கு ரூ. 23,142 கோடியும், மேல் நிலைக்கல்விக்கு ரூ. 3074 கோடியும் வழங்கியுள்ளது மாணவர்களின் படிப்பை இடை நிறுத்தலைக் குறைக்கும் ஒருஉத்தியாகும்.
ஒரு லட்சம் ஊனமுற்றோருக்கு வேலையை, தனியார் நிறுவனங்கள் மூலம் அரசு மானியத்துடன் அளிக்கும்திட்டமும் வரவேற்புக்குரியதாகும்.
தமிழக்தைப் பொருத்தவரையில், கோவை வேளாண் பல்கலைக்கழகத்திற்கு ரூ. 50 கோடி நிதி வழங்கப்படும்என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நிதியமைச்சரை பாராட்டுகிறேன். இந்த நிதி நிலை அறிக்கை மக்களின்நல்வாழ்வை மையமாக வைத்து தீட்டப்பட்ட பட்ஜெட்டாகும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக எம்.பியுமான ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவிக்கையில்,பணவீக்கத்தை குறைக்க பட்ஜெட்டில் நடவடிக்கை இல்லை. வளர்ச்சி திட்டங்கள் இல்லை. இந்த பட்ஜெட்டின்மூலம் செல்ல பிராணிகளின் உணவுகளின் விலை குறையுமே தவிர வளர்ச்சி ஒன்றும் ஏற்படாது என கூறினார்.
கம்யூனிஸ்ட் எம்.பி. குருதாஸ் தாஸ்குப்தா தெரிவிக்கையில், பணவீக்கத்தை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கைஎடுக்கப்படவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications