நீதிபதி மீது கல் எறிந்த கைதி
பார்மர் (ராஜஸ்தான்):இரட்டைக் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த கைதி, நீதிபதி மீது கல்லை விட்டு எறிந்ததால் பரபரப்புஏற்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கஜராம். இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த அவருக்கு நேற்று பார்மர்மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
கஜராம் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால்அவருக்கு நீதிபதி சந்திர சேகர் சர்மா ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். தீர்ப்பைக்கேட்டதும் கோபமடைந்த கஜராம், மறைத்து வைத்து எடுத்து வந்திருந்த ஒரு பெரிய கல்லை எடுத்து நீதிபதி மீது எறிந்தார்.
கல் நீதிபதியின் தோள்பட்டையைத் தாக்கிக் காயப்படுத்தியது. இந்த சம்பவத்தால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் உடனடியாகசுதாரித்துக் கொண்டு கஜராமை அங்கிருந்து அப்புறப்படுத்தி அழைத்துச் சென்றனர்.
கல்வீச்சில் காயமடைந்த நீதிபதி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தற்போது கஜராம் மீது நீதிபதி மீது கல்வீசித் தாக்கியது தொடர்பாகபுதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications