இலங்கைக்கு இந்திய போர் கப்பல்?

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:இலங்கை அரசுக்கு போர்க்கப்பலை வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது கவலை தருவதாக இலங்கைத் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள்கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை ராணுவத்துக்கு போர்க்கப்பல் ஒன்றை வாடகைக்கு அல்லது வேறுவழியில் வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2000மாவது ஆண்டு அதி நவீன போர்க் கப்பலை இந்தியா, இலங்கைக்கு வழங்கியது. ஆனால் அக்கப்பல் தற்போது பழுதடைந்து விட்டது.அதை சரி செய்வதற்காக இந்தியாவுக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் இக்கப்பலுக்குப் பதிலாக வேறு கப்பலை இந்தியா வழங்கியுள்ளது. இந்தக் கப்பல் கடலோரக் காவல் படையினரால் முன்புபயன்படுத்தப்பட்டதாகும்.

இலங்கை ராணுவத்துக்கு பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் வழங்கப்பட மாட்டாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கும், இந்தியத்தலைவர்களும் கூறியிருந்தனர். ஆனால் தற்போது அது மீறப்பட்டுள்ளது.

தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறிக் கொண்டு அப்பாவித் தமிழ் மக்களை இலங்கை அரசு கொன்று குவித்து வருகிறது. இனப்போரைநடத்தி வருகிறது. இதில் கடற்படையும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. கடலோர தமிழகக் கிராமங்களை ஏவுகணைகளை வீசி கடற்படை அழித்துவருகிறது.

எனவே இந்த நிலையில், இந்தியாவும் பிற நாடுகளும் பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை இலங்கை அரசுக்குத் தரக் கூடாது. இந்த ஆயுதங்கள்தமிழ் மக்களை அழிக்கவே வாங்கப்படுகிறது என்பதை அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+