தாலிக்கு குட்பை: காதலனுடன் ஆசிரியை ஓட்டம்
வேலூர்:கணவன் கட்டிய தாலியை கழற்றி, சாமி படத்தின் முன்பு மாட்டி வைத்து விட்டு, கள்ளக் காதலருடன் ஓடிப் போனார் கல்லூரி ஆசிரியை.இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
வேலூர் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசுந்தர். சி.ஆர்.பி.எப். இன்ஸ்பெக்டராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மகள் கவிதா (27)தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றுகிறார்.
தன்னுடன் பணியாற்றி வந்த சென்னை கொளத்தூரைச் சேர்ந்த விஜயராகவன் என்பவரை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். 6ஆண்டுகளுக்கு முன்பு இவர்களது திருமணம் நடந்தது. கல்யாணம் ஆன 3 ஆண்டுகள் கழித்து ஒரே பிரசவத்தில் கவிதாவுக்கு 3 குழந்தைகள்பிறந்தன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக 3 குழந்தைகளும் இறந்து போயின.
பின்னர் கவிதா கருத்தரிக்கவில்லை. இதையடுத்து சென்னை வந்த கணவனும், மனைவியும் சென்னை அருகே காட்டாங்கொளத்தூரில் உள்ளஎஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரியில் பணியாற்றி வருகின்றனர்.
கவிதா பயோடெக்னாலஜி துறையில் ஆசிரியையாக இருந்தார். அதே துறையில் விரிவுரையாளராக இருந்தவர் அலெக்ஸ் ராஜன். இவர்சேலையூரைச் சேர்ந்தவர். கவிதாவுக்கும், அலெக்ஸ் ராஜனுக்கும் இடையே கள்ளக் காதல் ஏற்பட்டுள்ளது.
இந்தக் கள்ளக்காதல் கடந்த மாதம், மாணவ, மாணவியருடன் வட இந்தியாவுக்கு சுற்றுலா சென்றபோது வலுவடைந்தது. இருவரும் ஒரேஅறையில் தங்கியுள்ளனர். அங்கு அவர்கள் அடித்த கூத்தைப் பார்த்து சக ஆசிரியர்களும், மாணவ, மாணவியர்களும் கோபமடைந்துகண்டித்துள்ளனர்.
இருந்தாலும் கவிதாவும், அலெக்ஸ் ராஜனும் இதைக் கண்டுகொள்ளவில்லை. ஊருக்குத் திரும்பிய பிறகு கவிதாவின் செய்கைகள்விஜயராகவனுக்குத் தெரிய வர அவர் மனைவியைக் கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு கவிதா வீட்டை விட்டு வெளியேறினார். போவதற்கு முன்பு விஜயராகவன் கட்டிய தாலியை கழற்றி சாமிபடத்தின் முன்பு மாட்டி விட்டுப் போய் விட்டார்.
இதுகுறித்து ராஜமங்கலம் காவல் நிலையத்தில் விஜயராகவன் புகார் கொடுத்துள்ளார். போகும்போது 40 பவுன் நகை, 40 ஆயிரம் ரூபாய் பணம்ஆகியவற்றையும் கவிதா எடுத்துச் சென்று விட்டதாக தனது புகாரில் விஜயராகவன் கூறியுள்ளார். இதேபோல அலெக்ஸ் ராஜனின் தாயாரும்மறைமலை நகர் காவல் நிலையத்தில் தனது மகனைக் காணவில்லை என புகார் கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications