இன்று மீண்டும் மேயராகிறார் மா.சுப்பிரமணியம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னை மாநகராட்சியின் மேயராக மீண்டும் மா.சுப்ரமணியம் இன்று தேர்வு செய்யப்படுகிறார்.
சென்னை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கு கடந்த 18ம் தேதி மறு தேர்தல் நடந்தது. இதில், திமுக சார்பில் 56பேரும், காங்கிரஸ் சார்பில் 22 பேரும், பாமக சார்பில் 12 பேரும், தேமுதிக சார்பில் 5 பேரும் (ஒருவர்உடனடியாக திமுகவுக்குப் போய் விட்டார்), பாஜக, விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் தலா 2 பேரும், சிபிஎம்சார்பில் ஒருவரும் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களில் 96 பேர் கடந்த திங்கள்கிழமையன்றும், தேமுதிகவைச் சேர்ந்த நான்கு பேர் நேற்றும்பதவியேற்றுக் கொண்டனர்.
இதையடுத்து இன்று மேயர் தேர்தல் நடைபெறுகிறது. திமுகவைச் சேர்ந்த முன்னாள் மேயர் மா.சுப்ரமணியமேமீண்டும் மேயராக தேர்வு செய்யப்படுகிறார். அவருக்கு மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானிபதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.












Click it and Unblock the Notifications