ஆந்திர எம்.எல்.சி. ஆகிறார் நக்மா!
ஹைதராபாத்:ஆந்திர மாநில எம்.எல்.சி தேர்தலில் நடிகை நக்மாவை காங்கிரஸ் கட்சி நிறுத்துகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடித்து வந்த நக்மா, சரத்குமார் விவகாரத்தில் சிக்கிய பின்னர் மும்பைக்குத்திரும்பிச் சென்றார். நடிகை ஜோதிகாவின் அக்காவான நக்மா, தற்போது போஜ்பூரி படங்களில் நடித்து வருகிறார்.சினிமாவில் பிசியாக இருந்தபோது பல சர்ச்சைகளில் சிக்கியவர் நக்மா. கார்த்திக், சரத்குமார், கங்குலி என பலருடன் இணைத்துப் பேசப்பட்டவர்.பின்னர் சினிமா மார்க்கெட் டல் அடிக்க ஆரம்பித்தவுடன் அரசியல் பக்கம் பார்வையைத் திருப்பினார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் ராஜ்யசபா எம்.பி பதவிக்குப் போட்டியிட கடுமையாக முயன்றார். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தநிலையில் தற்போது ஆந்திர மாநிலத்திலிருந்து எம்.எல்.சி (சட்டசபை மேலவை) உறுப்பினராகும் யோகம் நக்மாவைத் தேடி வந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் புதிதாக மேலவை உருவாக்கப்பட்டள்ளது. வருகிற 17ம் தேதி இதற்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ் சார்பில்நக்மா நிறுத்தப்படவுள்ளாராம்.
இதில் மாநில ஆளுநர் 12 பேரை எம்.எல்.சிக்களாக ஆக்க முடியும். அந்த கோட்டாவின் கீழ் நக்மாவை உள்ளே திணிக்க காங்கிரஸ் கட்சி முடிவுசெய்துள்ளது. நக்மாவை எம்.எல்.சியாக பரிந்துரைக்குமாறு கோரி ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான குலாம் நபிஆசாத், ஆந்திர மாநில ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூருக்கு கடிதம் அனுப்பியுள்ளாராம்.
ஆந்திர மாநிலத்தில் சட்டமேலவை அமைய குலாம் நபி ஆசாத்தான் பெரிதும் உதவினார். எனவே அவரது பரிந்துரையை ஏற்று நக்மா எம்.எல்.சி.ஆகி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் எம்.எல்.சி. ஆக்கி விட்டு அதன் பின்னர் ராஜ்யசபாவுக்குள் நக்மாவைக் கொண்டு வர காங்கிரஸ் தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
நக்மாவை எம்.எல்.சி ஆக்குவதன் மூலம் விஜயசாந்த்தின் கவர்ச்சி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து அவருக்கு கவுண்டராக நக்மாவைக் களம்இறக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications