ஏர் இந்தியா, இந்தியன் இணைப்புக்கு ஓ.கே!
டெல்லி:இந்தியன் (முன்னாள் இந்தியன் ஏர்லைன்ஸ்) மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்களை இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தியாவில் தற்போது அரசு சார்பில் இந்தியன் மற்றும் ஏர் இந்தியா ஆகிய இரு விமான நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்தியன் நிறுவனவிமானங்கள் பெரும்பாலும் உள்ளூர் சேவையிலேயே அதிகம் ஈடுபடுத்தப்படுகிறது. வெளிநாட்டுச் சேவையில் ஏர் இந்தியா ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் இரு நிறுவனங்களையும் ஒன்றாக இணைக்க பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து இதுதொடர்பான பூர்வாங்க நடவடிக்கைகள்தொடங்கின. தற்போது இந்த இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் 120 விமானங்கள், 30 ஆயிரம் ஊழியர்களைக் கொண்ட மிகப் பெரிய விமான நிறுவனமாக இவை இயங்கும். இதன் மூலம்சர்வதேச அளவிலான போட்டியையும் சமாளிக்க முடியும். இரு நிறுவனங்களும் இணைக்கப்பட்ட பின்னரும், தொடர்ந்து அரசு நிறுவனமாகவேஇவை இயங்கும்.
2010-11ம் ஆண்டு வாக்கில் ஒருங்கிணைந்த விமான நிறுவனத்தின் ஊழியர், விமான விகிதாச்சாரம் 200:1 என்ற கணக்கில் இருக்கும். தற்போதுஏர் இந்தியா நிறுவனம் புதிதாக 68 போயிங் ரக விமானங்களை வாங்க ஆர்டர் கொடுத்துள்ளது. இந்தியன் நிறுவனம் 43 ஏர் பஸ் ரகவிமானங்களை வாங்க ஆர்டர் கொடுத்துள்ளது.
மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ளதைத் தொடர்ந்து இணைப்புக்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடங்கும். இன்னும் 3மாதங்களுக்குள் இவை முடிவடையும் எனத் தெரிகிறது.
இணைப்பின் மூலம் ஊழியர்களின் நலன்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளப்படும் என மத்திய சிவில் போக்குவரத்துத் துறை அமைச்சர்பிரபுல் படேல் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications