For Quick Alerts
For Daily Alerts
Just In
மேடையில் இடறி விழுந்த அப்துல் கலாம்!
டெல்லி:ஜனாதிபதி அப்துல் கலாம் டெல்லியில் நடைப்பெற்ற விருது வழங்கும் விழாவில் மேடையில் தவறி விழுந்தார்.
சங்கீத நாடக அகாடமி விருதுகள் வழங்கும் விழாவில் கலாம் கலந்து கொண்டு கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
அதன் பின்னர் சிறப்புரை ஆற்றுவதற்காக அவர் மைக்கை நோக்கி சென்றார். மைக்கிற்குப் பின்னால் அமர்ந்திருந்த மணிப்பூர் மாநில கலைஞர்கேல்சந்திரா சிங்கின் (87) கைத் தடியில் இடறிய கலாம், தடுமாறி விழுந்தார். அருகிலிருந்த பாதுகாவலர்கள் ஓடி வந்து அவரை தூக்கினர்.
உடனடியாக சமாளித்துக் கொண்டு எழுந்த கலாம், மைக்கை நோக்கி சென்று மிக சகஜமாக தன் பேச்சை தொடர்ந்தார். அதிர்ஷ்டவசமாக கலாமுக்குகாயம் ஏதும் ஏற்படவில்லை.
கைத்தடி வைத்திருந்த கேல்சந்திரா அதிர்ச்சி அடைந்து, கலாமிடம் பலமுறை மன்னிப்புக் கேட்டார். ஆனால், அவரை கலாம் சமாதானப்படுத்தினார்.
Comments
Story first published: Wednesday, May 2, 2007, 5:30 [IST]