பின்லேடன் உயிரோடு தான் இருக்கிறார்-தலிபான்
லண்டன்:அல் கொய்தா தலைவர் ஓசாமா பின்லேடன் உயிருடன் இருப்பதாகவும், தொடர்ந்து தலிபான் தலைவர்களுடன் அவர் தொடர்பில் இருப்பதாகவும்தலிபான் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான முல்லா ததுல்லா கூறியுள்ளார்.
லண்டனைச் சேர்ந்த சேனல் 4 (இந்த நிறுவனம் நடத்திய பிக் பிரதர் நிகழ்ச்சியில்தான் ஷில்பா ஷெட்டி வெற்றி பெற்றார்) தொலைக்காட்சியின்செய்திப் பிரிவுக்கு அளித்த பேட்டி ஒன்றில் ததுல்லா கூறுகையில், வட மேற்கு பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் ஓசாமாபத்திரமாக இருக்கிறார்.
ஆனால் இப்போதைக்கு அவரை யாரும் எளிதில் பார்க்க முடியாது. அவர் உயிருடன் தான் இருக்கிறார் என்று எங்களுக்கு நம்பகமான தகவல்கள்மூலம் தெரிய வந்துள்ளது. அவர் இன்னும் தியாகி ஆகவில்லை.
ஓசாமாவுடன் (பாதுகாப்பாக) இருக்கும் தோழர்கள் எங்களுக்கு அவ்வப்போது செய்திகளை அனுப்பிக் கொண்டுள்ளனர். தலிபான்தலைவர்களுடன் தொடர்ந்து அவர் தொடர்பு வைத்துள்ளார்.
அவருக்கு மிகவும் நெருங்கிய, மெய்க்காவலர்களால் மட்டுமே ஓசாமாவை பார்க்க முடியும். எங்களது திட்டங்களை இவர்கள் மூலம் நாங்கள்ஓசாமாவுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
போர் திட்டங்களை இந்த மெய்க்காப்பாளர்கள் மூலம் ஓசமாமாவுடன் ஆலோசித்து ஒருங்கிணைந்து போரிட்டு வருகிறோம்.
தலிபான் அமைப்பில் புதிதாக ஆயிரக்கணக்கான வீரர்களை சேர்த்துள்ளோம். அனைவரும் தற்கொலைப் படைத் தாக்குதலுக்குத் தயாராகிவருகிறார்கள். அவர்களின் தாக்குதலுக்கு இலக்காவதற்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள இங்கிலாந்து படையினர் நாட்டை விட்டு வெளியேறிவிடுவது நல்லது என்றார் ததுல்லா.












Click it and Unblock the Notifications