காவிரி விவாதத்திற்கு சபாநாயகர் அனுமதி?
பெங்களூர்:லோக்சபாவில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்த விவாதத்திற்கு அனுமதி அளிப்பதாக சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி தன்னிடம் உறுதிஅளித்துள்ளதாக முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தேசியத்தலைவருமான தேவே கெளடா தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்து லோக்சபாவில் விவாதிக்க அனுமதி அளிக்கப்படும்என சோம்நாத் சாட்டர்ஜி உறுதியளித்துள்ளார். விவாதத்தின்போது கர்நாடகத்தைச் சேர்ந்தஅனைத்து எம்.பிக்களும் நியாயமற்ற நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்து ஆணித்தரமாக எடுத்துரைப்பார்கள்.
நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகத்தில் நடந்து வரும் போராட்டங்கள் அமைதியாக நடந்து கொண்டுள்ளன. இது வரவேற்புக்குரியது.
கர்நாடகத்திற்கு நியாயம் கிடைக்கும் வரையில், நடுவர் மன்றத் தீர்ப்பு மத்திய அரசின் அரசிதழில் இடம்பெறாது என்று நம்புகிறோம்.
நான் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ரகசியமாக சந்தித்ததாக வெளியான தகவல் அப்பட்டமான பொய். கடைசியாக 2005ம்ஆண்டுதான் நான் சோனியாவை சந்தித்தேன். அதன் பிறகு சந்திக்கவே இல்லை.
கர்நாடகத்தில் தற்போது உள்ள மதச்சார்பற்ற ஜனதாதளம், பாஜக கூட்டணி ஆட்சியையும் நான் ஆதரிக்கவில்லை. அதற்கு எனது ஆசியும்கிடையாது. இது எனது ஒப்புதல் இல்லாமல் அமைந்த ஆட்சி.
தேசிய அளவில் மாறி வரும் அரசியல் சூழ்நிலையின் வெளிப்பாடுதான் பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் சட்டசபைத் தேர்தல் முடிவுகள். இதுதவிர்க்க முடியாத மாற்றம்.
உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதளம் சில தொகுதிகளில் போட்டியிடும். அங்கு யாருடனும் கூட்டணி வைக்கமாட்டோம் என்றார் கெளடா.












Click it and Unblock the Notifications