தொழிலதிபரைக் கடத்தி பிளேடால் கிழித்த கும்பல்
சென்னை:நிலத்தகராறு காரணமாக தொழிலதிபரைக் ஜீப்பில் கடத்திச் சென்ற கும்பல் வழியில் காரை நிறுத்தி சரமாரியாக அந்த தொழிலதிபரை பிளேடால்உடல் முழுவதும் கீறிக் காயப்படுத்தி விட்டு தப்பிச் சென்றது.
சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் மதியகரன். எண்ணை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 1ம் தேதி தனது நிறுவனத்திற்கு அவர்சென்றார். அப்போது வழியில் ஒரு கும்பல் மடக்கி, ஜீப்பில் ஏற்றிச் சென்றது.
கண்ணைக் கட்டிக் கூட்டிச் சென்ற அக்கும்பல் வழியில் ஜீப்பை நிறுத்தி சரமாரியாகத் தாக்கியது. பின்னர் மதியகரன் உடல் முழுவதிலும் பிளேடால்கீறிக் காயப்படுத்தினர். அதன் பின்னர் அவரை இறக்கி விட்டு விட்டு அக்கும்பல் தப்பிச் சென்றது.
காயத்துடன் இறக்கி விடப்பட்ட மதியகரன் தான் சோழவரம் அருகே உள்ள பஞ்சம்பட்டி என்ற இடத்தில் இறக்கி விடப்பட்டதை அறிந்தார்.இதுகுறித்து சோழவரம் காவல் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து மதியகரனை மருத்துவமனையில் சேர்த்தனர்.












Click it and Unblock the Notifications