98 கவுன்சிலர்களை எதிர்த்து வழக்கு: தொடர்ந்தவருக்கு ரூ. 10,000 ஃபைன்
சென்னை:சென்னை மாநகராட்சியில் சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்து வெற்றி பெற்ற 98 கவுன்சிலர்கள் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்தவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில், திமுக கூட்டணியைச் சேர்ந்த 98 கவுன்சிலர்களும் உயர்நீதிமன்றத் தீர்ப்பையடுத்து தங்களது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்து விட்டுதேர்தலை சந்தித்தனர்.
இதன் மூலம், கள்ள ஓட்டு, வாக்குச் சாவடியைக் கைப்பற்றுதல், வன்முறை ஆகிய குற்றச்சாட்டுக்களை அவர்களே ஒப்புக் கொண்டதாகிறது.
எனவே இந்த 98 பேரும் கிரிமினல் சட்டப்படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். நீதிபதிமுருகேசன் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளும் முடிந்து விட்டன. இந்த நிலையில், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் வகையில்இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. எனவே மனுதாரருக்கு ரூ. 10 ஆயிரம் விதிப்பதாக உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications