அவதூறு வழக்கு: கோர்ட்டில் விஜயகாந்த் ஆஜர்
சென்னை:திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கில் தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த், சென்னை எழும்பூர்நீதிம்ன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்.
விஜயகாந்த் வீடு, அலுவலகம், கல்யாண மண்டபம், அவரது உறவினர்களின் வீடுகள், இருப்பிடங்களில் சமீபத்தில் வருமான வரி சோதனைநடைபெற்றது.
முதல்வர் கருணாநிதியின் தூண்டுதலே இதற்குக் காரணம் என விஜயகாந்த் மாலைமுரசு நாளிதழுக்கு பேட்டி அளித்திருந்தார். இதையடுத்துமுதல்வரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், திமுகவுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையிலும் விஜயகாந்த் பேசியுள்ளதாக கூறிஅவர் மீது எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆற்காடு வீராசாமி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பூதநாதன், விஜயகாந்த் நேரில் ஆஜராகி மனுவின் நகலைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறியிருந்தார். அதன்படிஇன்று விஜயகாந்த் நீதிமன்றத்தில் ஆஜராகி மனுவின் நகலைப் பெற்றுக் கொண்டார்.
பின்னர் வழக்கை வருகிற 21ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அன்றும் விஜயகாந்த் நேரில் ஆஜாரக வேண்டும் என உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications