தாய்லாந்து இளவரசி தமிழகம் வருகை
Subscribe to Oneindia Tamil
சென்னை:தாய்லாந்து இளவரசி மானா சக்ரி சிரிந்தோர்ன் ஒரு நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார்.
அகமதாபாத்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் கோவை வரும் அவருக்கு விமான நிலையத்தில் முறைப்படிவரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன் பின்னர் அவர் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் ஊட்டிசெல்கிறார்.
அங்குள்ள ஹெப்ரான் பள்ளி மற்றும் தோடா பழங்குடியினர் குடியிருப்புக்கு செல்கிறார். பின்னர் குட்ஷெப்பர்பள்ளியில் படிக்கும் தாய்லாந்து மாணவ, மாணவியருடன் அவர் கலந்துரையாடுகிறார்.
அதன் பின்னர் தொட்டபெட்டா தேயிலைத் தொழிற்சாலை, அருங்காட்சியகம், அரசு தாவரவியல் பூங்காஆகியவற்றுக்கும் விஜயம் செய்கிறார்.
தமிழக பயணத்தை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டர் மூலம் மைசூருக்கு அவர் புறப்பட்டுச் செல்கிறார்.












Click it and Unblock the Notifications