ஊழலற்ற நிர்வாகம்: ஆலோசனை தர குழு
சென்னை:ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகம் தொடர்பாக அரசுக்கு ஆலோசனை வழங்க நிர்வாக சீர்த்திருத்த குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தேர்தல் அறிக்கையில் ஊழலற்ற நிர்வாகம் வழங்கப்படும் எனஉறுதியளிக்கப்பட்டிருந்தது.
இதை மெய்ப்பிக்கும் வகையில், ஊழலுக்கு அடிப்படைக் காரணமான அதிகாரவர்க்கத்தினால் ஏற்படும் நடைமுறைத் தடைகளை அகற்றத்தேவையான ஆலோசனைகளை வழங்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள இக்குழுவில், 10 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி விஸ்வநாதன், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி குமாரசாமி, ஆலந்தூர் நகராட்சித் தலைவர் ஆர்.எஸ். பாரதிஆகியோர் இதன் உறுப்பினர்களில் சிலர்.
தமிழக அரசின் சட்டத் துறையின் தமிழ் பிரிவு இயக்குநர் சந்திரன் இதன் செயலாளராக இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications