பாடத்தில் சந்தேகம் கேட்ட மாணவர்களை பிரம்பால் அடித்த ஆசிரியை சஸ்பெண்ட்
கோவை:கோவை மாவட்டம் துடியலூர் அருகே பாடத்தில் சந்தேகம் கேட்ட மாணவர்களை பிரம்பால் அடித்த ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
துடியலூர் அருகே உள்ள இடிகரையில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் தங்கவேல், ரவி. சரியாகபடிக்காத காரணத்தால் இருவரையும் ஆசிரியை சகுந்தலா பிரம்பால் அடித்துள்ளார்.
அதில் மாணவர்களின் கை வீக்கம் கண்டது. இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், ஆசிரியை பாடம் நடத்தும்போது நாங்கள் சந்தேகம் கேட்போம்.அதனால் கோபம் அடைந்த ஆசிரியை தங்களை அடித்து விட்டதாக கூறினர்.
இதையடுத்து ஊர் மக்கள் ஒன்று கூடி பள்ளியின் முன்பு போராட்டத்தில் குதித்தனர். ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தலைமை ஆசிரியர்ராஜேந்திரனிடம் முறையிட்டனர். இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கார்மேகம் நடந்தது குறித்து விசாரணை நடத்தினார்.
அப்படியும் மக்கள் சமாதானம் அடையவில்லை. உடனடியாக ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதையடுத்து ஆசிரியை சகுந்தலா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன் பின்னரே போராட்டம் கைவிடப்பட்டது.
ஏற்கனவே சூலூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியை சகுந்தலா பணியாற்றியபோதும் மாணவர்களை அடித்ததாக சர்ச்சையில்சிக்கினார். இதனால் இடிகரைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இங்கும் அதே பிரச்சினையில் சிக்கி தற்போது சஸ்பெண்ட் ஆகியுள்ளார்.












Click it and Unblock the Notifications