இலங்கை கடற்படைக்கு ராஜ்யசபாவில் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தி வரும் தொடர் தாக்குதலுக்கு நாடாளுமன்ற ராஜ்யசபாவில் இன்று கடும் கண்டனம்தெரிவிக்கப்பட்டது. கச்சத்தீவை உடனடியாக திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தைச் சேர்ந்த எம்.பிக்கள்கட்சிப் பாகுபாடின்றி வலியுறுத்தினர்.

ராஜ்யசபாவில் இன்று காலை கேள்வி நேரம் தொடங்கும் முன்பு இந்தப் பிரச்சினையை பாஜக உறுப்பினர் திருநாவுக்கரசர் எழுப்பினார்.திருநாவுக்கரசர் பேசுகையில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பல மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றுள்ளது. இது தொடர் கதையாகிவிட்டது.

இதுகுறித்து பலமுறை பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். இந்தப் பிரச்சினையில் தலையிட்டு நிவாரணம்காணுமாறு அவர் வலியுறுத்தி வந்துள்ளார்.

இருப்பினும் இந்த அக்கிரமத்திற்கு முடிவே இல்லாமல் நீண்டு வருகிறது. தற்போது விடுதலைப் புலிகள் மீது இலங்கை அரசு குற்றம் சாட்டிபிரச்சினையைத் திசை திருப்ப முயற்சிக்கிறது.

இலங்கை அரசை, மத்திய அரசு மிகக் கடுமையாக எச்சரிக்க வேண்டும். இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்ட கச்சத்தீவை மீண்டும்இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்றார்.

அதிமுக உறுப்பினர் மலைச்சாமி பேசுகையில், இந்த விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியும், வெளியுறவுத்துறைஅமைச்சர் பிரணாப் முகர்ஜியும் அவையில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

புதுச்சேரியைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் நாராயணசாமி பேசுகையில், இந்த பிரச்சினை மிகவும் சீரியஸானது. இலங்கையின் தாக்குதல் தொடர்கதையாகி வருகிறது. இதை இப்படியே விடக் கூடாது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+