தமிழக மீனவர்களுக்கு வயர்லஸ் வசதி!
சென்னை:தமிழக மீனவர்களின் படகுகளில் ரூ. 70 கோடி செலவில் வயர்லஸ் கருவிகளைப் பொருத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 45 ஆயிரம் கட்டுமர படகுகளும், 7 ஆயிரம் இயந்திரப் படகுகளும் உள்ளன. இந்த படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்கசெல்லும்போது பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.
புயல், சூறாவளி போன்ற இயற்கைச் சீற்றங்களாலும், எல்லை தாண்டி செல்லும் போது இலங்கை கடற்படையினரிடம் சிக்கி விடும் அபாயத்தையும்மீனவர்கள் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.
இதற்குத் தீர்வு காணும் வகையில் தமிழக மீனவர்களின் படகுகளில் வயர்லஸ் கருவிகளைப் பொருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதை செயல்படுத்தரூ.70 கோடி செலவாகும்.
தமிழக அரசின் எல்காட் நிறுவனத்தின் உதவியுடன் இதை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வயர்லஸ் கருவி மூலம் ஆபத்து காலங்களில்கடலுக்குள் உள்ள மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்க முடிவதோடு, மீன்பிடி படகுகள் கடலின் எந்தப் பகுதியில் உள்ளன என்பதை கடலோரகட்டுபாட்டு அறை மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
மேலும் மீனவர்கள் இந்திய எல்லையைத் தாண்டி செல்ல நேரிடும்போது அதுகுறித்து மீனவர்களை எச்சரிக்கவும் இந்த வசதி உதவும்.












Click it and Unblock the Notifications