பஸ்சில் பயணம், மதுரை கலெக்டர் கலக்கல்!
மதுரை:மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜவஹர், மனு நீதி நாள் முகாமில் கலந்து கொள்வதற்காக அரசுப் பேருந்தில் ஏறி பயணித்தார்.
மதுரை அருகே உள்ள கோவில்பாப்பாக்குடி என்ற ஊரில் மனு நீதி நாள் முகாம் நடந்தது. இதில் ஆட்சித் தலைவர் ஜவஹர் கலந்து கொண்டுமக்களிடம் குறைகளைக் கேட்டார்.
இதற்காக மதுரை ஆட்சித் தலைவர் அலுவலகத்திலிருந்து பேருந்து நிலையம் வந்த ஜவஹர், அங்கிருந்து செல்லும் டவுன் பஸ்ஸில் ஏறி பயணித்தார்.
கோவில்பாப்பாக்குடிக்கு ரூ. 4.50 கொடுத்து டிக்கெட் எடுத்தார். அவருடன் வந்த அதிகாரிகளும் டிக்கெட் எடுத்தனர். பேருந்திலேயே மக்களிடம்குறைகளைக் கேட்ட ஆட்சித் தலைவரின் எளிய பயணத்தை பயணிகள் பாராட்டினர்.
பின்னர் கோவில்பாப்பாக்குடியில் இறங்கிய ஆட்சித் தலைவர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மனு நீதி நாள் முகாமில் கலந்து கொண்டார்.
வழக்கமாக தடபுடலாக ஜீப்பில் வந்து இறங்கும் ஆட்சித் தலைவர், வித்தியாசமாக டவுன் பஸ்சில் வந்திறங்கியதை கோவில்பாப்பாக்குடி மக்கள்ஆச்சரியத்துடன் பார்த்தனர்.












Click it and Unblock the Notifications