நக்சலைட் வெறியாட்டம்: 50 போலீஸார் பலி
ஜெகதால்பூர் (சட்டீஸ்கர்):சட்டீஸ்கர் மாநிலம் ரானிபோதி என்ற இடத்தில் நக்சலைட்டுகள் இன்று அதிகாலை, போலீஸ் முகாம் மீது நடத்திய வெறித் தாக்குதலில் 50 போலீஸார்உயிரிழந்தனர்.
தான்டேவடா மாவட்டம் பீஜப்பூர் அருகே உள்ள ரானிபோடி என்ற இடத்தில் போலீஸ் முகாம் ஒன்று உள்ளது. இன்று அதிகாலை இந்த முகாமைநக்சலைட்டுகள் பெரும் கும்பலாக வந்து தாக்கினர்.
முகாமில் இருந்த போலீஸார் மீது சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டனர். இதில் 50 போலீஸார் உயிரிழந்தனர். இதுகுறித்து பஸ்தார் சரக ஐஜிஆர்.கே.விஜ் கூறுகையில், சட்டீஸ்கர் ஆயுதப் படை வீரர்கள் மற்றும் சிறப்பு காவல் படை வீரர்கள் ஆகியோர் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்என்றார்.
நக்சலைட் தொல்லை அதிகம் உள்ள சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளை ஒழிக்க உள்ளூர் ஆண், பெண்களைத் தேர்ந்தெடுத்து அவர்களைக்கொண்ட சிறப்புக் காவல் படையை சட்டீஸ்கர் அரசு உருவாக்கியுள்ளது.
நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் அவர்கள் காவல்துறைக்கு உதவுவார்கள். இதற்காக அவர்களுக்கு மாதம் ரூ. 1,500 உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை நடந்த தாக்குதலில் போலீஸாருடன் சேர்ந்து இவர்களும் கணிசமான அளவில் கொல்லப்பட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன்புதான்இதே மாவட்டத்தில் எர்ரபோர் என்ற இடத்தில் உள்ள காவல் முகாமில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர் என்பதுநினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications