மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
டெல்லி:மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப் படி உயர்வை மத்திய அரசு அறிவிக்கவுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் அகவிலைப்படி உயர்த்தப்படும். 6 மாதங்களுக்கு ஒரு முறை மத்திய அமைச்சரவை கூடிஅகவிலைப்படி உயர்வை முடிவு செய்யும்.
ஜனவரி, ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு நடை முறைப்படுத்தப்படும். கடந்த ஆண்டு அகவிலைப்படி உயர்வு 29 சதவீதமாக இருந்தது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை, மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 % வரை அகவிலைப்படியை உயர்த்துவது தொடர்பாக இன்று மத்தியஅமைச்சரவை கூடி விவாதிக்கிறது.
இந்த அகவிலைப்படி உயர்வை அமல்படுத்துவதன் மூலம் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ. 3,900 கோடி நிதிச் சுமை ஏற்படும். இந்த செலவீனத்தை,மற்ற வரவுகள் மூலம் சரிக் கட்டவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது உயர்த்தப்பட்டுள்ள 6 சதவீத அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் மொத்தஅகவிலைப்படி 35 சதவீதமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications