ரூ. 216 கோடியில் புது அணை: கேரளா திட்டம்
கூடலூர்:முல்லைப் பெரியாறு அணைக்கு அருகே ரூ. 216 கோடி மதிப்பில் புதிய அணையைக் கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளதாக அம்மாநிலநீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் சசி கூறியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதைத் தூக்கி கிடப்பில் போட்டு விட்டது கேரளஅரசு.
இருமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் கேரளாவின் பிடிவாதத்தால் பயன் ஏதும் இல்லை. இந்த நிலையில் பெரியாறு அணைக்கு அருகே புதியஅணை கட்டி தமிழக மக்களின் வயிற்றில் மண்ணைப் போட புதுத் திட்டம் தீட்டியுள்ளது கேரள அரசு.
முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகி விட்டது. எனவே புது அணை கட்ட வேண்டும் என்று சமீப காலமாக கோரி வருகிறது கேரள அரசு. இந்தநிலையில் சமீபத்தில் புதிய நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழுவினர் கடந்த 2 நாட்களாக முல்லைப் பெரியாறு அணையில் பல்வேறுஆய்வுகளை மேற்கொண்டனர்.
இந்தச் சூழ்நிலையில் புதிய அணை கட்டும் திட்டம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து கேரள அரசின் நீர்வள ஆதாரத் துறை தலைமைப்பொறியாளர் சசி கூறுகையில், ரூ. 216 கோடி செலவில் பெரியாறு அணை அருகே புதிய அணையை கேரள அரசு கட்ட போகிறது. அதற்கான திட்டமதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு விட்டன என்று கூறியுள்ளார்.
இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள அரசு புதிய அணை கட்டினால், அது தமிழக விவசாயிகளுக்கு மிகப் பெரிய பாதிப்பைஏற்படுத்தும்.
தமிழக அரசு இந்த விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
இந்தி மாநிலங்களுக்கு போகும் "ரியல்" பவர்? 816ஆக உயரும் தொகுதிகள்.. மறுசீரமைப்பில் என்ன நடக்கும் -
தமிழ்நாடு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. யார் இவர்? வெங்கடராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
ராகுலிடம் போன டாக்குமெண்ட்! நள்ளிரவில் நடந்த மீட்டிங்! இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!!












Click it and Unblock the Notifications