திட்டியதால் ஆத்திரம்: மனைவி, மகனைகடப்பாரையால் குத்திக் கொன்ற கணவன்
சென்னை:ஆம்பளையா நீ என்று மனைவி தன்னைத் திட்டியதால் ஆத்திரமடைந்த கணவன், தனது மனைவி மற்றும் மகனை கடப்பாரையால் அடித்தும்,குத்தியும் கொடூரமாக கொலை செய்தார்.
சென்னை அருகே உள்ள மணலி பெரியதோப்பு பகுதியில் வசித்து வருபவர் பார்த்தசாரதி. கூலித் தொழிலாளியான இவரது மனைவி செல்வி (37).இவர்களுக்கு யுவராஜ் (14) என்ற மகனும், மோனிகா என்ற 9 வயது மகளும் உள்ளனர்.
தினசரி குடித்து விட்டுத்தான் பார்த்தசாரதி வீட்டுக்கு வருவார். இதனால் அவருக்கும், மனைவிக்கும் அடிக்கடி சண்டை நடக்கும். இந்த நிலையில்சம்பவத்தன்று, தனது கணவரை ஆம்பளையா நீ என்று கோபமாக கேட்டுள்ளார் செல்வி. அவருடன் சேர்ந்து யுவராஜும் சேர்ந்து தந்தையைத்திட்டியுள்ளார்.
இதனால் கோபமடைந்த பார்த்தசாரதி, வீட்டில் இருந்த கடப்பாரையை எடுத்து மனைவி, மகனை தாறுமாறாக அடித்துக் குத்தியுள்ளார். இதில்இருவரும் ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள்.
மகள் மோனிகாவையும் கடப்பாரையால் அடித்துள்ளார். இதில் மோனிகா காயமடைந்து மயங்கி விழுந்தார். பின்னர் வெறி கொண்டவர் போலகடப்பாரையுடன் கிளம்பியவர் நேராக காவல் நிலையம் சென்று சரணடைந்தார்.
இரு உடல்களையும் மீட்ட போலீஸார் மோனிகாவை மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில், அவளுக்கு சிகிச்சைகொடுக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications