இலங்கை ராணுவ முகாம்கள் தகர்ப்பு: 12 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:இலங்கையின் கிழக்கு மாவட்டமான மட்டக்களப்பில் விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் ஐந்து ராணுவ முகாம்கள் தகர்ப்பட்டன. 12பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் படுகாயமடைந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியான தொப்பக்கலாவிலிருந்து இன்று அதிகாலை விடுதலைப் புலிகள் திடீர் தாக்குதலைத்தொடுத்தனர். ராணுவத்தின் 5 முகாம்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

இதில் அந்த ஐந்து முகாம்களும் பெரும் சேதத்தை சந்தித்தன. இந்தத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர், 12 பேர் காயமடைந்தனர். இதுகுறித்துராணுவ செய்தித் தொடர்பாளர் பிரசாத் சமரசிங்கே கூறுகையில், கையெறி குண்டுகள், பீரங்கிகளால் விடுதலைப் புலிகள் தாக்கினர். ராணுவம்பதிலுக்குத் தாக்குதல் நடத்தியது.

ராணுவத் தரப்பில் நான்கு பேர் இறந்தனர். 3 பேர் காயமடைந்தனர். 14 வீர்ரகள் மற்றும் பொதுமக்களில் 11 பேருக்கு தோட்டாக்கள் சிதறியதில்காயம் ஏற்பட்டுள்ளது.

ராணுவம் பதிலுக்கு நடத்திய தாக்குதலில் புலிகளின் முகாம் ஒன்று பிடிபட்டது என்றார் அவர். இந்த சம்பவம் குறித்து புலிகள் தரப்பில் எந்தத்தகவலும் இல்லை.

கிழக்கிலங்கையில், சமீபத்திய சண்டைகளின் மூலம் புலிகள் வசமிருந்து 230 சதுர மைல் பரப்பளவை ராணுவம் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.இருப்பினும் இந்தப் பகுதிகளை முழுமையாக ராணுவம் இன்னும் நிலை நிறுத்திக் கொள்ளவில்லை. தொடர்ந்து இப்பகுதிகளில் சண்டை நடந்துவருவதால் ராணுவத்துக்கு இது முழு வெற்றி என்று கூற முடியாது என கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+