காஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஓசூர்:ஓசூரில் காஸ் சிலிண்டர் வெடித்ததில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் பலியானார்கள். 13 பேர் படுகாயமடைந்தனர், 3 வீடுகள் தரைமட்டமாகின.
கிருஷ்ணகிரி மாவட்டமா ஓசூரில், ராயக்கோட்டை செல்லும் சாலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீடுகள் உள்ளன. இங்கு சுந்தரமகாலிங்கம்என்பவரது வீட்டில் இன்று காலை சமையல் நடந்துள்ளது.
அப்போது எதிர்பாராதவிதமாக காஸ் சிலிண்டர் வெடித்தது. இதில் சுந்தரமகாலிங்கத்தின் வீடு மற்றும் அருகில் உள்ள மேலும் 3 வீடுகள் முற்றிலும்இடிந்து தரைமட்டமாகின.
இதையடுத்து தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து இடிபாடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி அதில் சிக்கியவர்களை மீட்டனர்.
இந்த கோர விபத்தில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் பரிதாபமாக பலியானார்கள். 13 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications