எஸ்.சி. மாணவிகளுக்கு ஏர் ஹோஸ்டஸ் பயிற்சி
சென்னை:ஆதிதிராவிட மாணவிகள் 100 பேருக்கு விமான பணிப்பெண் பயிற்சிக்கான உதவித் தொகையை தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்நலத்துறை அமைச்சர் தமிழரசி வழங்கினார்.
ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிட மாணவிகளுக்கு விமான பணிப்பெண் பயிற்சியளிக்கும்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆதி திராவிடப் பெண்கள் 100 பேருக்கு உதவித் தொகையை அமைச்சர் தமிழரசி வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழரசிபேசுகையில், விமான பணிப்பெண் பயிற்சிக்கான ஆணை இன்று வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாணவிக்கும் ரூ. 1 லட்சம் வீதம் 100பேருக்கு ரூ. 1 கோடியை தாட்கோ வழங்குகிறது. மாதாமாதம் ரூ. 200 உதவித் தொகையும் வழங்கப்படும்.
ஆதி திராவிடர்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லக்கூடாது என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். ஆதிதிராவிட மாணவிகளான நீங்கள்தாழ்த்தப்பட்டவர்கள் என்பதை தள்ளி வைத்துவிட்டு வாழ்க்கையில் வெற்றி பெறுவோம் என்று உறுதி எடுத்துக் கொண்டு செயல்படுங்கள் என்றார்.
தாட்கோ நிர்வாக இயக்குனர் சிவ.சூரியன் பேசுகையில், தமிழகத்தில் 1 கோடியே 14 லட்சம் ஆதிதிராவிடர்கள் இருக்கிறார்கள். இதில் 18 முதல் 24வயதுள்ள பெண்கள் 16 லட்சம் பேர்.
இதில் பயிற்சிக்காக பிளஸ் 2 அல்லது பட்டபடிப்பு முடித்த 17 முதல் 24 வயது வரையிலான மாணவிகள் 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு பணிப்பெண்பயிற்சி பெறும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு சென்னை அமைந்தகரையிலுள்ள ஏர் ஹோஸ்டஸ் அகாடமி மூலம் 1 வருடம் பயிற்சியளிக்கப்படும். இதில் ஆங்கிலம், இந்தி மற்றும்கணினி பயிற்சிகள் அளிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications