அஸ்திரா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
Subscribe to Oneindia Tamil
பாலஸோர் (ஒரிசா):விண்ணிலிருந்து விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கும், அஸ்திரா ஏவுகணை இன்று வெற்றிகரமாக ஏவி சோதிக்கப்பட்டது.
![]() |
ஒரிசா மாநிலம் சந்திப்பூர் கடலோர சோதனை தளத்திலிருந்து இந்த ஏவுகணைச் சோதனையை இந்திய விஞ்ஞானிகள் வெற்றிகரமாக நடத்தினர்.
குறுகிய தூர ஏவுகணையான அஸ்திரா, விண்ணில் 25 முதல் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கக் கூடிய தன்மை படைத்தது.இன்றுமுற்பகல் 11.56 மணிக்கு ஏவி சோதிக்கப்பட்டது.
டி.ஆர்.டி.ஓ உருவாக்கிய அஸ்திரா ஏவுகணை, வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இதுபோன்ற அதி நவீன ஏவுகணையை வைத்துள்ள நாடுகள் வரிசையில் 3வது இடத்திற்கு இந்தியா உயர்ந்துள்ளது. ரஷியா மற்றும் நேட்டோஅமைப்பிடம் தான் இதுபோன்ற நவீன ஏவுகணை உள்ளது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications