கை கோர்க்கும் ராமதாஸ், வைகோ, திருமா!
மதுரை: மதுரையில் பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெறவுள்ள முல்லை பெரியாறு பாசன விவசாயிகள் மாநாட்டில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாடு குறித்து தமிழர் தேசிய இயக்க தலைவரும், முல்லை பெரியாறு அணை உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளருமான பழ.நெடுமாறன் கூறுகையில்,
மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம, சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் கோடை காலங்களில் குடிநீர் பிரச்சனை ஏற்படுவதோடு, தென்னை மற்றும் விவசாய பயிர்கள் பட்டுப்போகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்கள் பிழைப்புக்காக வேறு இடத்திற்கு இடம் பெறும் நிலை ஏற்படும்.
தேசிய ஒருமைப்பாட்டை மதிக்கும் வகையில் கேரள அரசின் நடவடிக்கை இல்லை. நமக்கு நியாயமான உரிமையை நிலைநாட்ட மத்திய அரசு தவறிவிட்டது.
அரபிக்கடலில் 2,300 மில்லியன் கன அடி தண்ணீர் வீணாக கலக்கிறது. அதிலிருந்து 200மில்லியன் கன அடி தண்ணீரை தர கேரள அரசிற்கு மனமில்ைல.
இந்த பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வந்த உடனேயே தமிழக அரசு செயல்படுத்தியிருக்க வேண்டும், அல்லது கோர்ட்டு அவமதிப்பு வழக்காவது தொடர்ந்திருக்க வேண்டும். இதை செய்ய தமிழக அரசு தவறிவிட்டது.
எனவே முல்லை பெரியாறு பிரச்சனையில் நல்ல தீர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு மதுரையில் வரும் 31ம் தேதி நடத்த இருக்கிறோம்.
இதற்கு நான் தலைமை தாங்குகிறேன். மாநாட்டை பாமக நிறுவனர் ராமதாஸ் தொடங்கி வைக்கிறார். வைகோ, திருமாவளவன் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு பேசிகிறார்கள் என்றார்.
திமுகவுடன் கடும் மோதலில் குதித்துள்ள ராமதாஸும், திமுக கூட்டணியில் இருக்கிற திருமாவளவனும், அதிமுக கூட்டணியில் இடம் ெபற்றுள்ள வைகோவுடன் ஒரே மேடையில் பங்கேற்கவுள்ள இந்த மாநாடு, அரசியல் வட்டாரத்திலும் புதிய சூழலை உருவாக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
எவ்வளவு அசிங்கப்பட்டாலும் திருந்தல.. இந்திய டீம் தோற்கணும்னு சொல்லி அடிவாங்கும் பாகிஸ்தான் அமீர் -
இந்தியா – நியூசிலாந்து இறுதி போட்டி.. உலக கோப்பையை வெல்ல போவது யார்.. ஜோதிட கணிப்பு -
Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில் -
மகாபலிபுரம் டூ எண்ணூர்.. இந்தியாவின் மிக முக்கிய ரோடு.. மின்னல் வேகத்தில் தயார் ஆகும் 10 வழிச் சாலை -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோடை காலத்தில் இனி நிம்மதியாக போலாம் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க












Click it and Unblock the Notifications