தொட்டபெட்டாவில் பயங்கர தீ: 50 ஏக்கர் காடு காலி

Subscribe to Oneindia Tamil

கோவை: நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா வனப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் 50 ஏக்கர் பரப்பிலான வனப் பகுதி தீயில் கருகி விட்டது.

தொட்டபெட்டா வனச் சரகத்திற்கு உட்பட்ட புலி மலை, பள்ளத்தாக்கு மலை உள்ளிட்ட பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டது.

வேகமாக பரவிய இந்தத் தீயில் சிக்கி 50 ஏக்கர் பரப்பளவிலான வனப் பகுதி கருகி விட்டது. தீயணைப்புப் படையினர் தீவிரமாக போராடி தீயை அணைத்தனர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் சிக்கி பல சிறு விலங்குகளும் பலியாகி விட்டன. இருப்பினும் பெரிய அளவிலான விலங்குகள் அதிர்ஷ்டவசமாக தப்பி விட்டன. அதேபோல பெரிய மரங்களும் தீயில் சிக்காமல் தப்பியுள்ளன.

காட்டு எருமை, யானைகள், சாம்பார் மான், புள்ளி மான்கள் ஆகியவை கேரளாவில் உள்ள இந்திரா காந்தி வனவிலங்குகள் சரணாலாயத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+