சீன பாணியில் சிறப்பு பொருளாதார மண்டலம்-தயாநிதி
சென்னை: சீனாவில் உள்ளதைப் போல இந்தியாவிலும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும் என மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தயாநிதி மாறன் பேசுகையில்,
வெளிநாட்டு முதலீட்டை பெருக்க நாட்டின் பல பகுதிகளில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படுகின்றன. இவற்றை நாடு முழுவதும் அதிக அளவில் அமைக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.
இதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைச்சர் குழு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படுவது குறித்து விவாதிக்க இருக்கிறது.
இந்த கூட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது பற்றி விவாதிக்கப்படவுள்ளது. முதலீடு செய்யவரும் வெளிநாட்டவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அவர்களுடைய தேவைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும்.
இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்களில் அமைக்கப்படும் மையங்களின் அவர்களின் விருப்பதிற்கு ஏற்றவாறு குறைவான விலையில் தரமானதாகவும் பெறலாம் என்றார்.












Click it and Unblock the Notifications