கர்நாடக இசை விமர்சகர் சுப்புடு மரணம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:பிரபல கர்நாடக இசை விமர்சகர் சுப்புடு டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 91. சுப்புடுவின் உடலுக்கு ஜனாதிபதி அப்துல்கலாம் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இசை விமர்சகரான சுப்புடு என்ற சுப்ரமணியம் கர்நாடக இசையில் இந்துஸ்தானி இசை கலப்பதை கடுமையாக எதிர்த்தவர். இவரது விமர்சனங்கள் காரசாரமானவை சுவையானவை, பல நேரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை.
கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் குன்றியிருந்த அவர் நேற்று முன்தினம் டெல்லியில் காலாமானார்.
ஜனாதிபதி அப்துல் கலாம் நேரில் சென்று சுப்புடுவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நேற்று காலை 11.30 மணிக்கு சுப்புடுவின் உடல் தகனம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications