விஸ்கி அடித்து விழுந்து இறந்தாரா உல்மர்?
லண்டன்:பாகிஸ்தான் பயிற்சியாளர் பாப் உல்மர், கழுத்து நெரித்துக் கொல்லப்படவில்லை. அதிக அளவில் விஸ்கி சாப்பிட்டு, நிலை தடுமாறி விழுந்து, கழுத்தில் அடிபட்டு இறந்திருக்கலாம் என புதிய தகவல் கிளம்பியுள்ளது.
உல்மர் மரணம் தொடர்பாக நாளுக்கு நாள் ஒரு தகவல் வெளியாகி வருகிறது. அவர் கொலை செய்யப்பட்டார் என முதலில் கூறப்பட்டது. கழுத்தை நெரித்து அவர் கொலை செய்யப்பட்டதாக பின்னர் கூறப்பட்டது. 2 நாட்களுக்கு முன்பு அவர் ஹோட்டல் டவலால் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பாகிஸ்தான் அணி சந்தித்த அதிர்ச்சித் தோல்வியால் மனம் உடைந்த பாப் உல்மர், விஸ்கி சாப்பிட்டுள்ளார். அதிக அளவில் சாப்பிட்டதால் நிலை தடுமாறி விழுந்துள்ளார். அப்போது அவரது கழுத்தில் அடிபட்டு மரணமடைந்துள்ளார் என புதிய தகவல் கூறுகிறது.
![]() |
இதுகுறித்து லண்டனிலிருந்து வெளியாகும் டெய்லி மெயில் பத்திரிக்கையில் வெளியாகியுள்ள செய்தி:
பாப் உல்மர் இறந்த அன்று அவர் இருந்த நிலையைப் பார்த்த ஒருவர் கூறியுள்ள தகவல் இது. தான் தங்கியிருந்த ஹோட்டல் பாரில் மிகுந்த சோகத்தோடு தனியாக அமர்ந்திருந்தார் உல்மர். ஜானி வாக்கர் பிளாக் லேபல் விஸ்கியை அளவுக்கு அதிகமாக அவர் குடித்துக் கொண்டிருந்தார்.
பின்னர் அவர் அங்கிருந்து எழுந்து சென்றார். அதன் பின்னர்தான் அவர் மரணமடைந்தார். எனவே அறைக்குத் திரும்பிய பின்னர் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்திருக்க வேண்டும். அப்போது கழுத்து எலும்பில் அடிபட்டு அவர் இறந்திருக்கக் கூடும் என டெய்லி மெயில் பத்திரிக்கை செய்தி கூறுகிறது.
இதுதவிர இன்னொரு தகவலும் வெளியாகியுள்ளது. அயர்லாந்து அணியுடன் பாகிஸ்தான் மோதி தோல்வி அடைந்தாதல் உல்மர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆனால் பாகிஸ்தான் அணியினரிடம் சோகம் ஏதும் இல்லை.
மாறாக அன்று இரவு பாகிஸ்தான் அணியினர் ஜாலியாக, கார் டீலரும், மிகப் பெரிய கோடீஸ்வரருமான தாரிக் மாலிக்கின் வீட்டுக்கு சாப்பாட்டுக்குக் கிளம்பியுள்ளனர். உல்மரை தங்களுடன் அழைத்துச் செல்லவில்லையாம். இதுவும் உல்மருக்கு சோகத்தைக் கூட்டியுள்ளது.
இதுகுறித்து தாரிக் மாலிக் கூறுகையில், உல்மர் உள்பட அனைவருமே அன்று இரவு விருந்துக்கு வருவதாக இருந்தது. ஆனால் உல்மர் திடீரென இறந்து விட்டதால் அந்த விருந்து ரத்து செய்யப்பட்டு விட்டது என்று கூறியுள்ளார்.
மாலிக்கை விசாரிக்க விரும்பிய ஜமைக்கா போலீஸார் அவரை விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர். ஆனால் இதுவரை மாலிக் விசாரணைக்கு வராமல் உள்ளனர்.
-
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
இந்தியா – நியூசிலாந்து இறுதி போட்டி.. உலக கோப்பையை வெல்ல போவது யார்.. ஜோதிட கணிப்பு -
எவ்வளவு அசிங்கப்பட்டாலும் திருந்தல.. இந்திய டீம் தோற்கணும்னு சொல்லி அடிவாங்கும் பாகிஸ்தான் அமீர் -
Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில் -
இன்றைய டாப் 10 பேச்சுக்கள் 09/03/2026: ஸ்டாலின் முதல் சீமான் வரை கூறிய நச் கருத்துகள் -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சியால் தமிழ்நாடு அரசியலில் ஏற்பட போகும் மாற்றம்.. முதல்வர் யோகம் யாருக்கு -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்?













Click it and Unblock the Notifications