ரெடியாகும் மதுரை, கோவை, திருச்சி சாப்ட்வேர் பூங்காக்கள்
சென்னைகோவையில் தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்கான பணிகள் தொடங்கி விட்டன. மதுரை, திருச்சி, சேலம், நெல்லை ஆகிய இடங்களில் இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சட்டசபையில், இதுெதாடர்பாக பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கு முதல்வர் அளித்த பதில்:
கோவை மருத்துவக் கல்லூரிக்குச் ெசாந்தமான 29.08 ஏக்கர் நிலத்தை, அக்கல்லூரியிடமிருந்து வாங்கி எல்காட் நிறுவனத்துக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டு விட்டது. ேமலும் தேவைப்படும் கூடுதல் இடமும் பார்க்கப்பட்டு வருகிறது.
இதேபோல மதுரை, திருச்சி, சேலம், நெல்லை ஆகிய நகரங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நெல்லையில் அமைக்கப்படும் தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்கு தனி இடம் பார்க்கப்பட்டுள்ளது. நாங்குநேறி தொழில்நுட்பப் பூங்காவில் அது அமையாது.
ேவலூரிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும். தஞ்சையில் விவசாய நிலங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இடம் கிடைத்தால் அங்கும் அமைக்கப்படும்.
தமிழகத்தின் 2ம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்ப்ப பூங்காக்களை அமைக்க அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்துப் பணிகளும் நல்ல நிலையில் போய்க் கொண்டிருக்கின்றன என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications