ரூ257 கோடிக்கு ஏலம் போன சங்கரா மருத்துவமனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:காஞ்சிபுரம் சங்கர மடத்துக்குச் சொந்தமான சென்னை சங்கரா மருத்துவமனை ரூ. 257 கோடிக்கு ஏலம் போயுள்ளது.

சென்னை மேடவாக்கம் அருகே உள்ள பெரும்பாக்கத்தில், சங்கர மடத்துக்குச் ெசாந்தமான சங்கரா மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமைன மீது வங்கிக் கடன் அதிகரித்து விட்டதால் அைத விற்க சங்கர மடம் முடிவு செய்தது.

இதுெதாடர்பாக உயர்நீதிமன்றத்தில் அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்ற உயர்நீதிமன்றம் ஏலத்திற்கு அனுமதி வழங்கியது. சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ் உள்ளிட்ட நான்கு நிறுவனங்கள் ஏலம் கேட்டன.

இதில் ஸ்ரீராம் நிறுவனம் அதிகபட்சமாக ரூ. 265 கோடிக்கு ஏலம் கேட்டது. குேளாபல் நிறுவனம் ரூ. 257 கோடிக்கு ஏலம் கேட்டிருந்தது.

நேற்று இந்த ஏலம் தொடர்பான மனு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் விசாரைணக்கு வந்தது. அப்ேபாது குளோபல் நிறுவனத்துக்கு ஏலத்தை முடிவு செய்வதாக நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர்.

இந்த நிறுவனம் மருத்துவமனையில் தற்போது பணியாற்றி வரும் ஊழியர்களை அப்படியே வைத்துக் ெகாள்வதாகவும், ஏழைகளுக்காக 50 இலவச படுக்கைகளை ஒதுக்குவதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏலம் கொடுக்கப்பட்டுள்ள குேளாபல் நிறுவனம் மே 15ம் தேதிக்குள் வங்கிக் கடனுக்கான தொகையை செலுத்த வேண்டும். ஜூன் 30ம் தேதிக்குள் மீதத் ெதாகையை சங்கர மட அறக்கட்டளைக்கு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+