For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் 6 இடங்களில் பூகம்ப ஆய்வு மையங்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:தமிழகத்தில் ஆறு இடங்களில் பூகம்ப ஆய்வு மையங்கள் அமைக்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் திண்டுக்கல் ஐ. பெரியசாமி சட்டசபையில் ெதரிவித்தார்.

இதுெதாடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், சென்னை, கடலூர், நாகப்பட்டனம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் பூகம்ப ஆய்வு மையங்கள் அமைக்கப்படும்.

சுனாமி, பூகம்பம் மற்றும் இயற்கைப் பேரழிவு தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம், தேசிய கடல் தொழில்நுட்பக் கழகம் ஆகியவை இணைந்து மக்களுக்கு தேவையான விழிப்புணர்வுத் தகவல்களை வழங்கும்.

கடலோரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு இயற்கைச் சீற்றங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய கையேடுகளை அரசு வழங்கியுள்ளது.

பூகம்பம் குறித்த தகவல்களை பதிவு செய்யும் மையங்கள் சென்னை, கொடைக்கானல், சேலம் ஆகிய நகரங்களில் உள்ளன. இதுதவிர மாநிலம் முழுவதும் 52 இடங்களில் இயற்கைச் சீற்ற எச்சரிக்கை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X