14வது சார்க் மாநாடு-டெல்லயில் துவக்கம்
டெல்லி:தெற்காசிய கூட்டமைப்பின் (சார்க்) 14வது உச்சி மாநாடு டெல்லியில் இன்று தொடங்கியது.
2 நாட்கள் நடைபெறும் சார்க் மாநாடு டெல்லி, விஞ்ஞான் பவனில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ளது.
தீவிரவாதம், போதைப் பொருள் தடுப்பு, பஞ்சம், பொருளாதர முன்னேற்றம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து இதில் விவாதிக்கப்படவுள்ளது.
மாநாட்டின் முக்கிய அம்சமாக தெற்காசிய பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.
மாநாட்டை பிரதமர் மன்ேமாகன் சிங் தொடங்கி வைக்கிறார். பாகிஸ்தான் பிரதமர் செளகத் அஜீஸ், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக் ஷே, ேநபாள பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா, மாலத்தீவுகள் அதிபர் முகம்மது அப்துல் கயூம், பூடான் பிரதமர் லியான்போ காண்டு வாங்க்சுங், வங்கதேச அரசின் தலைமை ஆலோசகர் பக்ருதீன் அகமது ஆகிேயார் பங்ேகற்கின்றனர்.
சார்க் அமைப்பின் 8வது உறுப்பினராக புதிதாக ேசர்ந்துள்ள ஆப்கானிஸ்தான் சார்பில் அந்நாட்டு அதிபர் ஹமீத் கர்ஸாய் பங்கேற்றார்.
முதல் முறையாக அெமரிக்கா, ஐேராப்பிய யூனியன், சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் பார்வையாளராக கலந்து ெகாண்டன.
சார்க் மாநாடுகளில் பார்வையாளராக கலந்து ெகாள்ள தங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று ஈரான் விண்ணப்பித்துள்ளது. இந்த விண்ணப்பத்தை சார்க் நாடுகள் ஏற்கனவே ஏற்றுக் ெகாண்டுள்ளன.
ெதற்காசிய பிராந்தியத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டாலும், தீவிரவாதம் குறித்து அதிக அளவில் விவாதம் இடம்பெறும் எனத் தெரிகிறது.
சார்க் மாநாட்டையொட்டி டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.