For Daily Alerts
Just In
கம்ப்யூட்டரால் இயங்கும் அனுமன் சிலை
டெல்லி:உலகிலேயே முதன்முதலாக கம்ப்யூட்டரால் இயங்கும் அனுமன் சிலை டெல்லியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இந்த சிலை 108 அடி உயரத்தில் அனுமன் நின்ற நிலையில் விஸ்வ ரூப தரிசனம் தருவதாக அமைக்கப்பட்டுள்ளது. இது 13 வருட உழைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதோடு மற்றொரு முக்கிய சிறப்பம்சமும் இந்த அனுமன் சிலையில் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கம்ப்யூட்டர் இணைக்கப்பட்டு, பட்டனை இயக்கினால் அனுமன் இதயப்பகுதி திறந்து உள்ளிருந்து தங்கத்தாலான ராமர்-சீதா சிலை வெளியே தோன்றி பக்தர்களுக்கு காட்சி தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட இந்த அனுமன் சிலையை பற்றிய தகவல்களை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்காக அனுப்பப்பட்டுள்ளது.
Comments
இந்தியா உலகம் அமெரிக்கா statue டெல்லி ஐரோப்பா indian politics computer hanuman கம்ப்யூட்டர் guinness news updates central politics india update தமிழகம்
Story first published: Tuesday, April 3, 2007, 5:30 [IST]