தலைமை செயலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:தமிழக தலைமை செயலகம் முன் தீக்குளிக்க முயன்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.
இதுக்குறித்து போலீஸார் கூறுகையில்,
சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியை சேர்ந்த முனியாண்டி என்பவருக்கும் அவருடைய இரு மகன்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மகன்கள் இருவரும் முனியாண்டியை அடித்துள்ளனர்.
இதுக்குறித்து அவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் இன்று அவர் தலைமை செயலகம் முன்பு, மண்ணெண்ணையை தன் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார். உடனே போலீஸார் அவரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications