மலேசிய எம்எல்ஏ சென்னையில் மாரடைப்பால் மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:மலேசிய எம்.எல்.ஏ. டத்தோ சிவலிங்கம் (62) சென்னையில் மாரடைப்பால் மரணமடைந்தார்.
டத்தோ சிவலிங்கம் சென்னைக்கு தனிப்பட்ட முறையில் வந்திருந்தார். இன்று காலை 10.15 மணிக்கு அவர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் 10.40 மணிக்கு அவர் மரணமடைந்தார். பின்னர் அவரது உடல் சிவலிங்கத்தின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
மலேசியாவின் செலாங்கர் மாகாண சட்டசபை உறுப்பினராக இருந்தவர் டத்தோ சிவலிங்கம். செலாங்கர் மாகாண எக்சிகியூட்டிவ் கவுன்சிலர் உறுப்பினராகவும் அவர் இருந்தார்.
மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியில் 1968ம் ஆண்டு அவர் இணைந்தார். 1986ம் ஆண்டு செலாங்கர் மாகாண சட்டசபைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications