பெரியாறு வழக்கு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்
டெல்லி:முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவது தொடர்பான கேரள அரசின் கருத்துக்கு நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு கூறி தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்தாமல் இருக்க கேரள அரசு புதிய சட்டம் கொண்டு வந்தது. அதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கில் கேரள அரசு தரப்பில் 2வது கூடுதல் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அணையின் உயரத்தை அதிகரிக்க முடியாது. புதிதாக ஒரு அணை கட்டப்படும். அதில் கேரள அரசு உறுதியுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி ரவீந்திரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து நான்கு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வழக்கு விசாரணை மே 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications