பஸ் கட்டண உயர்வு: தேமுதிக போராட்டம்
சென்னை:அரசுப் பேருந்துகளில் மறைமுக கட்டண உயர்வைக் கண்டித்து வரும் 11ம் தேதி தேமுதிக சார்பில் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் கட்சித் தலைவர் விஜயகாந்த கூறியுள்ளார்.
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விழுப்புரம்-சென்னை பாயிண்ட் டூ பாயிண்ட் பேருந்துகளில் ரூ.45 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இப்போது இந்த பேருந்து விரைவு பேருந்து என பெயர் மாற்றப்பட்டு, நபருக்கு ரூ.7 உயர்த்தப்பட்டு ரூ.52 என வசூலிக்கப்படுகிறது. இதனால் ஏழைகள் மிகவும் சிரமமப்படுகிறார்கள்.
இந்த மறைமுக கட்டணத்தின் மூலம் மக்களை வஞ்சிப்பதோடு, அவர்களை ஏமாளிகளாகவும் பார்க்கிறது அரசு. இந்தப் போக்கைக் கண்டித்தும், போக்குவரத்து அமைச்சரையும், தமிழக அரசையும் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.
வரும் 11ம் தேதியன்று பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரில், கழக பொது செயலாளர் ராமுவசந்தன் தலைமையில் நடைபெறும் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications