எஸ்ஐ தேர்வு: வயிற்றுப் பிள்ளையோடு ஓடிய பெண்கள்
சென்னை:வயிற்றில் பிள்ளையோடு சப் இன்ஸ்பெக்டர் தேர்வில் பெண்கள் கலந்து கொண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் பெண்களுக்கான சப் இன்ஸ்பெக்டர் தேர்வு நேற்று தொடங்கியது. சென்னையில் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இந்தத் தேர்வு நடந்தது.
810 பேர் தேர்வுக்காக அழைக்கப்பட்டிருந்தனர். அவ்ரகளில் 554 பேர் மட்டுமே வந்திருந்தனர்.
காலை 6 மணிக்கு தேர்வு தொடங்கியது. முதலில் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. பின்னர் உயரம் சரி பார்க்கப்பட்டது.
அதன் பின்னர் 400 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடந்தது. இந்த தூரத்தை 2 நிமிடத்தில் கடக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பல பெண்கள் முதல் முதலாக ஓடியதால் ஓட முடியாமல் பாதியிலேயே மயங்கி விழுந்தனர். அவர்களை பெண் காவலர்கள் தண்ணீர் தெளித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சில கர்ப்பிணிப் பெண்களும் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு ஓடியதுதான். கர்ப்பிணிப் பெண்கள் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ளக் கூடாது. இருந்தாலும் தடையை மீறி சில பெண்கள் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
லலிதா என்ற 7 மாத கர்ப்பிணியும், ஆதி லட்சுமி என்ற 8 மாத கர்ப்பிணியும் ஓட முடியாமல் ஓடினர். அதேபோல வனிதா என்ற கர்ப்பிணியும் ஓட முயன்றபோது போலீஸார் அவரைத் தடுத்து நிறுத்தி விட்டனர். அதேபோல லட்சுமி, லலிதாவையும் பாதியிலேயே ஓடிப் போய் தடுத்து நிறுத்தி விட்டனர்.
என்னால் ஓட முடியாவிட்டாலும் 400 மீட்டர் தூரத்தை 2 நிமிடங்களில் நடந்து கடக்கிறேன் என்று 9 மாத கர்ப்பிணி ஒருவர் கூறியதால் அதை அதிகாரிகள் அனுமதித்தனர். ஆனால் அவரால் முழுமையாக நடந்து முடிக்க முடியவில்லை.
மொத்தம் 12 கர்ப்பிணிப் பெண்கள் இதுபோல ஓட முயன்று தடுத்து நிறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டனர். கருவில் உள்ள குழந்தை குறித்து கவலைப்படாமல் காவலர் பணியில் எப்படியாவது சேர்ந்து விட வேண்டும் என்ற ஆர்வத்துடன் வந்த அந்த 12 பேரும் பெரும் ஏமாற்றத்துடன், கண்ணீர் மல்க அங்கிருந்து வெளியேறினர்.
அடுத்த கட்டமாக எழுத்துத் தேர்வு 20ம் தேதியன்று நடைபெறவுள்ளது.
-
காற்றழுத்த தாழ்வு பாதை.. இன்று 3 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு! -
கோவை டூ தென்காசி வரை.. அடுத்த 3 மணி நேரம் பிச்சு உதறப்போகுது கனமழை.. உஷார் மக்களே! -
சென்னையை குளிர்வித்த திடீர் மழை ஏன்? தமிழக எல்லையான தடாவில் நடந்த அந்த சம்பவம்! வெதர்மேன் விளக்கம் -
சென்னையின் மிக முக்கிய இடத்தை.. அப்படியே செதுக்க போறாங்க.. களமிறக்கப்பட்ட இரும்பு ராட்சசன்! -
சென்னையில் மழை! கருமேகம் சூழ்ந்து மரங்கள் அசைந்தாடி! குளிர்ந்த காற்றுடன் இடி சப்தமும் கேட்குது! -
இந்த ஒரு ப்ராஜக்ட் போதும்.. சென்னையின் அடையாளமே மாறப்போகிறது.. பணிகள் ஓவர்.. எதிர்பார்க்காத திட்டம் -
மகளிர் உரிமை தொகை மட்டுமல்ல... மகளிர் உரிமையும் முக்கியம்.. திமுக, அதிமுகவின் கள நிலவரம் -
கண்ணை மூடி திறந்தால்.. வெறும் 2.30 மணி நேரத்தில் 778KM போகலாம்.. வருது சென்னை - ஹைதராபாத் புல்லட்! -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன்












Click it and Unblock the Notifications