கள்ளக்காதல்: கணவர், பேரன், பேத்தியைவிட்டு விட்டு வாலிபருடன் ஓடிய பெண்

Subscribe to Oneindia Tamil

சென்னை:பேரன், பேத்தி எடுத்த பெண்மணி, தன்னை விட மிகவும் வயது குறைந்த வாலிபருடன் வீட்டை விட்டு ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடி, கரந்திபுரம் பகுதியில் வசிப்பவர் மேகராஜன் (52). இவருக்கு 45 வயதாகும் சரேஜா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 25 வயதில் மகன் உள்ளார். அவருக்குக் கல்யாணமாகி ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

பேரன், பேத்தி எடுத்து விட்ட சரோஜாவுக்கு காமம் தலைக்கேற, பக்கத்து வீட்டில் வசித்து வந்த 34 வயதாகும் ராஜு என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இது மேகராஜுக்குத் தெரிய வந்து அதிர்ந்தார்.

பேரன், பேத்தி எடுத்து விட்ட வயதில் இது தேவையா என்று மனைவியை அவர் கடுமையாக கண்டித்துள்ளார். ஆனாலும் சரேஜா காதில் அது ஏறவில்லை. தொடர்ந்து ராஜுவுடன் தனது கள்ளக்காதலை மறைமுகமாக வளர்த்து வந்தார்.

இந்த நிலையில், ராஜுவும், சரேஜாவும் வீட்டை விட்டு ஓடி விட்டனர். இதுகுறித்து சரோஜாவின் மகன் சுரேஷ், காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். காணாமல் போனபோது சரோஜா 20 பவுன் நகை அணிந்திருந்தாராம்.

ராஜு ஏற்கனவே இதுபோல 2 பெண்ளுடன் ஓடி விட்டு மீண்டும் திரும்பி வந்தவராம். எனவே சரோஜாவின் நகைகளைக் குறி வைத்து அவரைக் கூட்டிக் கொண்டு அவர் போயிருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+