திருவிழாவில் பட்டாசு விபத்து: 3 பேர் பலி
வேலூர்:வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நடந்த கோவில் திருவிழாவில் வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் ஏற்பட்ட தீவிபத்தில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
குடியாத்தம் அருகே உள்ள சென்றாம்பள்ளி கிராமத்தில் ராமர் கோவில் உள்ளது. இங்கு ராம நவமியையொட்டி திருவிழா நடந்தது. ஆயிரக்கணக்கானோர் திருவிழாவில் பங்கேற்றனர்.
இரவு 10 மணிக்கு மேல் பட்டாசுகள், வான வேடிக்கைகள் வெடிக்கப்பட்டன. இதில் ஒரு ராக்கெட், அங்கு நின்றிருந்த ஆட்டோ மீது போய் விழுந்து வெடித்தது. ஆட்டோவில் பொருத்தப்பட்ட காஸ் சிலிண்டரில் தீப்பொறி பட்டதால் பலத்த சப்தத்துடன் ஆட்டோ வெடித்துச் சிதறியது.
மேலும் அந்த ஆட்டோவிலும் பல பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்ததால் அத்தனையும் சேர்ந்து படபடவென ஒரே நேரத்தில் வெடித்து அந்தப் பகுதியே பெரும் போர்க்களம் போல மாறியது.
இந்த பயங்கர வெடிவிபத்து மற்றும் தீவிபத்தில் சிக்கி ஆகாஷ் என்ற 12 வயது சிறுவனும், அசோக்குமார் என்ற வாலிபரும் இறந்தனர். இன்னொரும் இந்த விபத்தில் பலியானார். ஆனால் அவர் யார் என்பது தெரியவில்லை. 10க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது.
இந்த விபத்து காரணமாக ராமர் கோவில் திருவிழா நிறுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications