Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெடிவிபத்தில் தேடப்பட்ட 3 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்:விழுப்புரம் அருகே நடந்த வெடிவிபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

விழுப்புரம் அருகே செண்டூர் கிராமத்தில், வெடிபொருட்களுடன் சென்ற கார் வெடித்து 16 பேர் பலியானனர். புதுச்சேரி, மணலிப் பட்டையைச் சேர்ந்த சேகர் என்பவரிடமிருந்து இந்த வெடிபொருட்களை சப் டீலர்களான அண்ணாமலை, நாகப்பன், சண்முகம் ஆகியோர் வாங்கி சாலை அமைக்கும் பணிக்கு பாறைகளை உடைப்பதற்காக வெடிபொருட்கள் வாங்கப்பட்டுள்ளன.

இந்த வெடிபொருட்களை நாகப்பன், அண்ணாமலை, சண்முகம் ஆகியோர் ஜீப்பில் கொண்டு சென்றுள்ளனர். அவர்களுடன் சேகரிடம் வேலை பார்க்கும் பலராமன், குமார் ஆகியோரும் சென்றுள்ளனர். பாபு என்பவர் ஜீப்பை ஓட்டியுள்ளார்.

தென்னாலப்பாக்கத்தில் உள்ள சேகரின் கிட்டங்கி அருகே நாகப்பன், அண்ணாமலை, சண்முகம் ஆகியோர் இறங்கிக் கொண்டனர். குமார், பாபு, பலராமன் ஆகியோர் மட்டும் வெடிபொருட்களுடன் சென்றுள்ளனர். விபத்தில் இந்த 3 பேரும் இறந்து விட்டனர். மற்ற 3 பேரும் தப்பி விட்டனர்.

விபத்தைத் தொடர்ந்து 3 பேரும் தலைமறைவாக இருந்தனர். அவர்களைப் பிடிக்க போலீஸார் தீவிரமாக நடவடிக்கை எடுத்தனர். இதில் மூன்று பேரும் சிக்கியுள்ளனர். அவர்களைக் கைது செய்த போலீஸார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவத்தன்று 150 டெட்டனேட்டர்கள், வெடிபொருட்கள், 372 மீட்டர் வயர்கள் ஆகியவற்றை ஜீப்பில் கொண்டு சென்றதாக கைதான 3 பேரும் போலீஸாரிடம் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் நாச வேலை எதுவும் இல்லை, கவனக் குறைவாக எடுத்துச் சென்றதால்தான் விபத்து ஏற்பட்டுள்ளதாக டிஜிபி முகர்ஜி கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+