வெடி விபத்து-இறந்தவர்கள் குடும்பத்துக்கு தேமுதிக உதவி
சென்னை: விழுப்புரம் அருகே நடந்த ஜீப் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேமுதிக தலைவர் விஜய்காந்த் நிதியுதவி வழங்குவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ராமுவசந்தன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த சனிக்கிழமையன்று விழுப்புரம்-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் செண்டூர் கிராமத்தில் கல் உடைக்கும் வெடிபொருட்கள் ஏற்றி வந்த ஜீப் ஒன்று தீடீர் என வெடித்ததில் 16 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தேமுதிக தலைவர் விஜய்காந்த் செண்டூர் கிராமத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.மேலும் உயிரிழந்தவரிகளின் குடும்பங்களுக்கும் ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேமுதிக சார்பில் தலா ரூ. 25,000 நிதியுதவியை விஜய்காந்த் விரைவில் வழங்குவார் என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications