ஒரு நாள் போட்டியிலிருந்து லாரா ஒய்வு
கிரெனடா:உலகக் கோப்பை தொடருக்குப் பின் ஒருநாள் போட்டியில் இருந்து விலகப் போவதாக மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் லாரா கூறியுள்ளார்.
உலககோப்பை போட்டியில் சூப்பர் 8 சுற்றில் மேற்கிந்திய தீவுகள் அணி தொடர்ச்சியாக 4 நான்கு போட்டியில் தோல்வி அடைந்து அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து விட்டது.
இந்நிலையில் அந்த அணியின் கேப்டன் லாரா ஒருநாள் போட்டியில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
உலகக் கோப்பை போட்டிக்கு பின் மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்கிறது. இந்த அணியில் நான் இடம்பெற மாட்டேன்.
உலகக் கோப்பைக்கு பின் மேற்கிந்திய தீவுகள் அணியில் நிறைய இளம் விரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் நான் ஒரு நாள் போட்டியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன் என அவர் கூறினார்.
உலகக் கோப்பை போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி இன்னும் வங்கதேசம் மற்றும் இங்கிலாந்துடன் மோதவுள்ளது. இதுவே லாராவின் கடைசி ஆட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
37 வயதாகும் லாரா 1990ல் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானர். இதுவரை 297 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள லாரா 10,354 ரன்கள் குவித்துள்ளார். இதில் 19 சதமும், 63 அரைசமும் அடித்துள்ளார்.












Click it and Unblock the Notifications