விமானப் படையில் சேர தமிழக இளைஞர்களுக்கு வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:விமானப் படையின் ஏர்-மேன் பணிக்கான தேர்வு வரும் 28ம் தேதி முதல் ஆவடி விமான தளத்தில் ஆரம்பமாகிறது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்ந்தவர்களுக்கு, இந்திய விமானப் படையின் தொழில்நுட்ப பிரிவு, தொழில்நுட்பம் அல்லாத பிரிவு, ஏர்மேன் பணிகளில் சேர்வதற்கான தேர்வுகள் வரும் 28ம் தேதி முதல் மே மாதம் 4ம் தேதி வரை ஆவடி விமானப்படை தளத்தில் 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது.

இந்தப் பதவியில் சேர திருமணமாதவர்களாக இருக்கவேண்டும். 1986 ஆண்டு ஜூலை மாதத்திற்கு 1ம் தேதிக்கு பின்பும் 1990 செப்டம்பர் 30ம் தேதி முன்பும் பிறந்தவர்களாக இருக்கவேண்டும். பிளஸ் 2 வகுப்பில் கணிதம், இயற்பியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் 50 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்.

அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பாலிடெக்னிக்குகளில் மெக்கானிக்கல், எல்க்ட்ரிகல், எல்க்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் பட்டயப் படிப்பை 50 சதவீதத்துடன் முடித்திருக்க வேணடும்.

தொழில்நுட்பம் அல்லாத பிரிவு ஏர்மேன் பணிக்கு பிளஸ் 2 வகுப்பில் அறிவியல், கலை அல்லது வணிகவியல் பாடங்களில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்

இதுகுறித்து தகவல் அறிய தாம்பரம் விமானப்படை தேர்வு மையத்தின் அலுவலகத்திலோ, அதன் 2239 5553, எக்ஸ்டென்ஷன் 3359 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் தொடர்பு கொள்ளளலாம் என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+